விமானத்தில் பயணம் செய்வதானால் கண்டிப்பாக பயணச் சீட்டு பதிவு செய்திருக்க வேண்டும். பயணத்தின்போடு கட்டாயம் அதை உடன் வைத்திருக்க வேண்டும்.
இந்த முறையை மாற்றி, பயணச்சீட்டிற்கு பதிலாக கைவிரல் ரேகை, முக அடையாளத்தை பதிவு செய்வதன் மூலம் பயணம் மேற்கொள்ளும் பயோமேட்டிக் தொழில்நுட்பம் வெகு விரைவில் விமான நிறுவனங்கள் பயன்படுத்தவிருக்கின்றன.
முன்னதாக இந்த தொழில்நுட்பம் குறித்த அறிவிப்பை அமெரிக்காவின் ஜெட்வேஸ் விமான நிறுவனம் வெளியிட்டது. இருப்பினும் இது குறித்த தொழில்நுட்பத்தினை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கவின் டெல்டா நிறுவனம் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நுட்பம் வெற்றி பெற்றுவிட்டால், போலியான மனிதர்கள் பயணிப்பது முற்றிலும் தடுக்கபட்டுவிடும்.