இது நடந்தது அமெரிக்காவில். நண்பர் பற்றி தவறான தகவல் பகிர்ந்ததால், மூன்று கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய தண்டனை பெற்றுள்ளார் ஒரு பெண்மணி. அமெரிக்க நாட்டின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த பெண்மணி ஜாக்குலின்.
இவர் 2015 ம் ஆண்டு தனது மகள் கொலை செய்யப்பட்டதாக டுவென் டயல் என்பவர் குறித்து போஸ்ட் செய்திருந்தார். அதைப் பார்த்து மனம் நொந்து போன டயல் நீதி மன்றம் சென்றார்.
அதை விசாரித்த கரோலினா நீதிபதி, பொய்யான குற்றச்சாட்டு, மற்றும் மனம் நோகம்படி பதிவிட்ட குற்றச்சாட்டிற்காக ஜாக்குலினுக்கு 5 லட்சம் டாலர்கள் அபராதம் விதி த்து தீர்ப்பு அளித்தார். இந்த தொகை இந்திய மதிப்பில் 3 கோடிக்கு மேல் வரும்.
பேஸ்புக் இலவசமானதுதான். ஆனால் அதில் இப்படி பொய்யான தகவல்களை, அடுத்தவர் பற்றிய அவதூறுகளை, பொய்யான குற்றச்சாட்டுகளை போஸ்ட் செய்யக் கூடாது. மீறி செய்தால், கண்டிப்பாக அதற்கான தண்டைனை அனுபவித்தே ஆக வேண்டும்.
Tags: Facebook Fraud, Facebook Post, Facebook Criminal, Facebook rumour.